ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது; கடற்படை தளபதி தகவல்
டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்திய கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பாக தினேஷ் திரிபாதி கூறியதாவது, பாகிஸ்தான் கடற்படை அதன் துறைமுகங்களிலேயே நிற்குமாறு இந்திய கடற்படை வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான மோதலை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கடற்படை தயார் நிலையிலேயே உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளிலேயே நிறுத்தின. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. என்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
