“கும்கி 2” படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி
சென்னை, நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி- 2 என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்தது. இந்த படத்தை தயாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு வாங்கி ரூ.2 கோடியே 50 லட்சத்தை பிரபு சாலமன் திருப்பித் தரவில்லை என்றும் அதனால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், படத்தை வெளியிட டிசம்பர் 3-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று இன்று காலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை கடைசி வழக்காக விசாரிப்பதாக உத்தரவிட்டார். இந்தநிலையில், பிரபு சாலமனின் வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. “பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என 'கும்கி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. விசாரணையில் ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
