செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் கர்ப்பரட்சாம்பிகை சமேத வழித்துணை பணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புத்திர பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணம் கைகூடாமல் கவலைப்படுவோருக்கு சிறந்த பரிகார தலமாகவும், குரு ஸ்தலமாகவும் இந்த தலம் விளங்குகிறது. இங்கு சுவாமியின் திருவருளால் நித்திய பூஜைக்கு கங்கை தீர்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமை காலையில் கோ பூஜை நடைபெறும். அவ்வகையில் வெள்ளிக்கிழமையான இன்று காலை 6.00 மணியளவில் கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
