ஷபாலி வர்மாவுக்கு ஊக்கத்தொகை: அரியானா முதல்-மந்திரி வழங்கினார்
சண்டிகார், சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக மகுடம் சூடியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகியாக ஜொலித்தார். அரியானாவைச் சேர்ந்த ஷபாலிவர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் அவர் நேற்று அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது சாதனையை பாராட்டி ரூ.1½ கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார். மேலும் அரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தூதராகவும் நியமிக்கப்பட்டார். ‘ஷபாலியின் சாதனை, அரியானா மாநிலத்தின் அனைத்து மகள்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்களது அற்புதமான செயல்பாட்டின் மூலம் தேசத்தின் பெயரை பிரகாசிக்க செய்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என நயாப் சிங் சைனி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
