ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்
கொல்கத்தா, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான (டிரேடிங்) பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தங்களது பயிற்சியாளர்கள் குழுவில் பல மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வரிசையில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரை நியமித்தது. அத்துடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து கே.எல்.ராகுலை வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில் கொல்கத்தா அணி தங்களது புதிய உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சனை நியமித்துள்ளது.What a day, Watt-o Knight! Welcome to the Family, @ShaneRWatson33 pic.twitter.com/hpOclOv7LAமுன்னதாக இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டன் ரகானே தலைமையில் விளையாடிய கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து வெளியேறியது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
