ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி - சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது
சென்னை, சென்னை மண்ணடியில் உள்ள சவரிமுத்துதெரு, மற்றும் பி.வி.அய்யர் தெரு ஆகிய இடங்களில் சிகரம் மற்றும் சிற்பி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தவர் ரவி(வயது 57). இவரது நிறுவனத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயசந்திரன் மற்றும் அவரது மனைவி பிரேமலீலா ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பலமுறை ஏலச்சீட்டில் பணம் கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு முதலீடு மற்றும் Dividend செட்டில்மெண்ட் செய்யும் வகையில் ரவி ரூ.2,34,83,125/- மதிப்பிலான காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயசந்திரன் மற்றும் பிரேமலீலா, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ரவியை தேடிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
