காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள் - உமர் அப்துல்லா
ஸ்ரீநகர், தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் உள்பட பலர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், டெல்லி சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது; “டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமும் இதை அனுமதிக்காது. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொருவரும் பயங்கரவாதிகளோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களோ அல்ல. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம். குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
