திருச்செந்தூர் கோவிலில் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி, ஆன்மிக ஈடுபாடு கொண்ட 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி கோவில்களில் நடைபெறுகிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலையரங்கில், வயது முதிர்ந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் தக்கார் அருள் முருகன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர், 70 வயதைக் கடந்த 51 தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து தம்பதியர்கள் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் அவர்கள், கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களிடம் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் நாகவேல், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
