நடிகைகளிடம் தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்க வேண்டும்- பிரீத்தி அஸ்ரானி
சென்னை, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர், நடிகை பிரீத்தி அஸ்ரானி. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘பிரஷர் குக்கர்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். தமிழில் ‘அயோத்தி’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றிய பிரீத்தி அஸ்ரானி, ‘எலெக்ஷன்’, ‘பல்டி’ ஆகி படங்களில் நடித்தார். சமீபத்தில் கவினுடன் இணைந்து நடித்த‘கிஸ்’ படம் வரவேற்பை பெற்றது. தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளது. இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரீத்தி அஸ்ரானியிடம் ஒரு நடிகையின் தோற்றத்தை வைத்து எழுப்பப்பட்ட கேள்வி பரபரப்பாக பேசப்பட்டது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரீத்தி அஸ்ரானி, "ஒருவர் எதையாவது சொல்லிவிட்டு, ‘நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன்’ என்று மழுப்ப நினைக்கிறார்கள். ஆனால் எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு வலிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் அந்த நடிகை (கவுரி கிஷன்) திடமான நிலையில் அந்த கேள்வியை எதிர்கொண்டது நல்ல விஷயம். பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும். அங்கு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
