ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம்
துபாய், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, இப்ராகிம் ஜட்ரன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் (709) 2 இடம் சறுக்கி 7-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இதனால் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி மீண்டும் டாப் -5 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அதேபோல் இலங்கை வீரர் அசலங்காவும் ஒரு இடம் ஏற்றம் கண்டு முறையே 6-வது இடத்தை பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மஜராஜ் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 6-வது இடம் வகிக்கிறார். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 8-வது இடத்தில் உள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
