கனத்த இதயத்தோடு பூடான் வந்துள்ளேன் - பிரதமர் மோடி
திம்பு, 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- டெல்லியில் நேற்று நடந்த கொடூர சம்பவத்தால், கனத்த இதயத்தோடு பூடான் வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். முழு தேசமும் அவர்களோடு நிற்கிறது. இந்த சதித்திட்டத்தின் அடியாழத்தை எங்களது விசாரணை அமைப்புகள் கண்டுபிடிக்கும். சதிகாரர்களை தப்பவிடமாட்டோம். காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தியாவும், பூடானும் இணைந்து ஒரு செயற்கைக்கோளையும் உருவாக்கி வருகிறோம். இது இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான சாதனையாகும். இந்தியா-பூட்டான் உறவுகளின் முக்கிய பலம் நமது மக்களுக்கு இடையிலான இருக்கும் ஆன்மீக தொடர்பு. இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் ராஜ்கிரில் ராயல் பூட்டான் கோவில் திறக்கப்பட்டது. இப்போது, இந்த முயற்சி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறது. பூட்டான் மக்கள் வாரணாசியில் ஒரு பூட்டான் கோவில் மற்றும் விருந்தினர் மாளிகையை விரும்பினர். இதற்கு தேவையான நிலத்தை இந்திய அரசு வழங்கி உள்ளது. இந்த கோவில்கள் மூலம், நமது விலைமதிப்பற்ற மற்றும் வரலாற்று உறவுகள் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறோம். இந்தியாவும் பூட்டானும் அமைதி, செழிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் பாதையில் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பகவான் புத்தர் மற்றும் குரு ரின்போச்சின் ஆசீர்வாதங்கள் நமது இரு நாடுகளிலும் நிலைத்திருக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
