விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
பாட்னா, பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடை பெறுகிறது . 121 தொகுதிக ளுக்கு இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா கூட்டணி ஏற்கனவே பெண்களுக்கான உதவித் தொகையை அறிவித்து இருந்தது. பெண்கள் உதவித் தொகை என்று கூறி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 'பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை நிதீஷ் குமார் அரசு வரவு வைத்திருக்கிறது. எதிர்க்கட்சியான ராஷ்டி ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு போட்டியாக பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் வழங்கப் படும் என்று ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முதல் -மந்திரி வேட்பாளரு மான தேஜஸ்வி யாதவ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு மகர சங்க ராந்தியான ஜனவரி 14. யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் வழங்குவோம்.அதோடு விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். அனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள் (பி.ஏ.சி.எஸ்.), முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் களுக்கும் மாநி லத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். கடைசி கட்டத்தில் அவர் வாக்குறுதி களை அள்ளி வீசி வருகிறார்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
