இலங்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை! பிரமிட் திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கை பொதுமக்களுக்கு பிரமிட் திட்டம் தொடர்பில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பெரும் வருமானம் திரட்டும் நோக்கில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் பிரமிட் திட்டம் தொடர்பாக தலைமை பொலிஸ் அதிகாரிக்கு புகார் கிடைக்கபெற்றதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 23ம் திகதி 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்னேவ, ஹோகந்தர, பேராதெனிய மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய 40 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இத்தகைய திட்டங்களை மக்களிடையே அறிமுகப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் ஆட்களை சேர்த்தல் போன்றவை சட்டவிரோத நடவடிக்கை என்றும், இது போன்ற செயல்களுக்கு உதவிபவர்கள் அபராதம் அல்லது சிறை தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரமிட் திட்டம் என்பது தனிப்பட்ட நபரை சேர்ப்பதன் மூலம் அல்லது திட்டத்தில் பங்கேற்பாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்வதன் மூலம் கிடைக்க கூடிய நன்மைகளை வழங்கும் திட்டமாகும். இது போன்ற வணிக முறைகள் எங்கேனும் நடந்தால் அல்லது விளம்பரப்படுத்தப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தை அல்லது இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
