புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

  தினத்தந்தி
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

மும்பை,வார இறுதிநாளான இன்று (17.10.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டது. அதன்படி, புதிய உச்சம் பெற்ற நிப்டி 124 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 709 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் புதிய உச்சம் பெற்ற பேங்க் நிப்டி 290 புள்ளிகள் அதிகரித்து 57 ஆயிரத்து 713 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், புதிய உச்சம் பெற்ற பின்நிப்டி 154 புள்ளிகள் அதிகரித்து 27 ஆயிரத்து 535 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. புதிய உச்சம் பெற்று 484 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 952 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 310 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் புதிய உச்சம் பெற்று 65 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 105 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 13 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மூலக்கதை