செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்; 9.1% வருடாந்திர அதிகரிப்பு
புதுடெல்லி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9.1% அதிகரித்து உள்ளது. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. கடந்த ஆகஸ்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது. இது, அதற்கு முந்தின ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் (2024-ம் ஆண்டு) ஒப்பிடும்போது 6.5 சதவீதம் (ரூ.1.75 லட்சம் கோடி) அதிகம் ஆகும். இதேபோன்று, ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் ரூ.10.04 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வசூல், 9.9 சதவீதம் (ரூ.9.13 லட்சம் கோடி) அதிகம் ஆகும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட முடிவின்படி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி முதல் புதிய ஜி.எஸ்.டி. முறை நடைமுறைக்கு வந்தது. 4 அடுக்கு வரி விதிப்பு, இரண்டடுக்கு வரி முறையாக குறைக்கப்பட்டது. இதனால், 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்கள் முடிவுக்கு வந்தன. 5 மற்றும் 18 சதவீத வரி விகிதங்களே இனி நடைமுறையில் இருக்கும். நுகர்வோரின் பொருட்கள் வாங்கும் திறனை அதிகரிப்பது மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான நோக்கத்தில் வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
