பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்: 3 போலீசார் பலி; 16 பேர் காயம்
பலூசிஸ்தான்,பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் மாவட்டத்தில் தஷ்த் சாலையில் காவல் துறை அதிகாரிகளை ஏற்றியபடி வாகனம் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.பணியை முடித்து விட்டு 40 பேர் கொண்ட போலீசாரை ஏற்றியபடி வந்த வாகனம் மீது நடந்த இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பலூசிஸ்தான் தேசிய கட்சி-மெங்கல் என்ற கட்சியானது, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டம் 19-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.பலூச் தன்னார்வலர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில், 2-வது நாள் போராட்டத்தின்போது, அந்த கட்சியின் தலைவர் சர்தார் அக்தர் மெங்கல் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் இருந்து அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கையாள்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பணியை முடித்து கொண்டு திரும்பி வந்தபோது, அவர்களுடைய வாகனம் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இந்த தாக்குதல் ஆனது, நடந்து வரும் போராட்டத்துடன் நேரடி தொடர்புடைய ஒன்றா? என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. எனினும், சமீப நாட்களாக பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
