உலக அளவில் பெரும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை: நாளை இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
டெல்லி, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார்.மேலும், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதி்ப்பு முறையையும் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 கூடுதலாக சதவீத வரி வித்துள்ளார். அதேபோல், சீனா மீது கூடுதலாக 34 சதவீதம், வியட்நாம் மீது கூடுதலாக 46 சதவீதம், தைவான் மீது கூடுதலாக 32 சதவீதம், ஐரோப்பிய யூனியன் மீது கூடுதலாக 20 சதவீதம் என பல்வேறு நாடுகள் மீது வரி விதித்துள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா போன்ற நாடு பதிலடி கொடுத்துள்ளது.அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீதம் வரி விதித்துள்ளது. அதேபோல், பிற நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டு வருகின்றன. இதனால், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை உலக அளவில் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது.அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், ஜெர்மனி, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
