இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முதல் இரு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்
நாக்பூர்,இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டி வரும் 6ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளதை அடுத்து இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பரான ஜேமி ஸ்மித் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஜேமி ஸ்மித் மூன்றாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்ததன் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்தும் விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேலுக்கு லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், ஜேமி ஸ்மித் தனது உடற்தகுதியை எட்டாத காரணத்தால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
20-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது ஏன்.? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
பொங்கல் எதிரொலி... எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
உரிய நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் - அமமுக அறிவிப்பு
