பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் முடிந்தும் பும்ரா பந்துவீச்சை கண்டு பயப்படும் ஆஸி. வீரர்
மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தம்முடைய 4 வயதாகும் சகோதரியின் மகன் (மருமகன்) பும்ராவை பார்த்து அவருடைய ஆக்சனில் தமக்கு எதிராக வீட்டில் பவுலிங் செய்வதாக மார்ஷ் கூறினார். அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை முடிந்தும் பும்ராவின் பந்துவீச்சு தமக்கு பயத்தை கொடுக்கிறது என்று கலகலப்பாக பேசினார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய சிறிய மருமகன் 4 வயது மட்டுமே நிரம்பியவர். அவருடன் நான் வீட்டில் கிரிக்கெட் விளையாடினேன். அப்போது அவர் ஜஸ்பிரித் பும்ராவின் ஆக்சனுடன் வந்து எனக்கு எதிராக பவுலிங் செய்தார். அந்த வகையில் பும்ராவின் நைட்மேர் எனக்கு தொடர்கிறது" என கூறினார்.அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்து ஒரு மாதம் ஆகியும் பும்ரா பந்துவீச்சு தமக்கு பயத்தை கொடுப்பதாக மார்ஷ் கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
