பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம்.. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு
மும்பை:இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. வாரத்தின் இறுதி நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்தது.பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற சாதகமான அம்சம், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் போன்றவை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தின. குறிப்பாக, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கினர். மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 740.76 புள்ளிகள் உயர்ந்து 77,500.57 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 846.15 புள்ளிகள் உயர்ந்து 77,605.96 புள்ளிகள் வரை சென்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் சாதகமான போக்கு காணப்பட்டது. நிப்டி 258.90 புள்ளிகள் அதிகரித்து 23,508.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 297.3 புள்ளிகள் உயர்ந்து 23,546.80 புள்ளிகள் வரை சென்றது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4.31 சதவீதம் உயர்ந்தது. அந்த நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டில் லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.3,359 கோடியாக அதிகரித்ததாக கூறியிருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்வடைந்தன. இதேபோல் மூன்றாம் காலாண்டில் நெஸ்லே நிறுவனத்தின் நிகர லாபம் 4.94 சதவீதம் அதிகரித்து ரூ.688.01 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 4.25 சதவீதம் உயர்வடைந்தன.இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்தது.ஐடிசி ஹோட்டல், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.26 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 76.64 டாலராக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து ரூ.86.59 ஆக உள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
