கடும் சரிவில் இருந்து அதிரடியாக மீண்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவில் இருந்து அதிரடியாக மீண்டது. அதன்படி, காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் சரிந்தது. நிப்டி, பேங்க் நிப்டி, மிட்கேப் நிப்டி உள்பட அனைத்து குறியீடுகளும் கடும் சரிவை சந்தித்தது.அதன்பின்னர், காலை 10 மணி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து அதிரடியாக மீளத்தொடங்கியது. வர்த்தக இறுதியில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 219 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 768 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 367 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 583 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 843 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 133 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 153 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 880 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.63 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 134 புள்ளிகளிலும், 490 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 997 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.காலை வர்த்தகம் தொடங்கிய உடன் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில் பின்னர் சரிவில் இருந்து பங்குச்சந்தை மீண்டதையடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
