நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு,கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். முதுகு வலியால் அவதிப்பட்டதால், அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதையடுத்து, கெங்கேரி அருகே உள்ள பிஜிஎஸ் ஆஸ்பத்திரியில் தர்ஷன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்கி ஒரு மாதம் ஆன பின்பும், இன்னும் அவர் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதற்கிடையில், தர்ஷன் நிரந்தர ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, நேற்று தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஆஜராகி, ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதற்கு தர்ஷன் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த ஜாமீன் மனு மீது விரிவான வாதம் நடைபெற வேண்டும் என்று இருதரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து, நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜாமீன் மனு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
