காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 குண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
ஸ்ரீநகர்,காஷ்மீரின் பு ல்வாமா நகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டேனிஷ் பஷீர் என்ற நபரை தடுத்து நிறுத்தி, அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அந்த வாகனத்தின் இருக்கைக்கு அடியில் 10 கையெறி குண்டுகள் மற்றும் 5 பேட்டரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம் புல்வாமாவில் நடைபெற இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
