உ.பி.யில் ஆன்லைன் வழியே ஆயுத விற்பனை; 7 பேர் கைது
முசாபர்நகர்,உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நகரில் ஆன்லைன் வழியே ஆயுத விற்பனை நடந்து வருகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேச போலீசார் சோதனை நடத்தியதில் 7 பேர் பிடிபட்டனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சமூக ஊடகங்களின் உதவியுடன் ஆயுத விற்பனையில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், 2 பேர் ஆயுதங்களை வாங்கியவர்கள் ஆவர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.அந்த 7 பேரும் அசாம் ரிஸ்வி, விவேக், பிரதீக் தியாகி, மணீஷ் குமார், ரிஷப் பிரஜாபதி, விஷால் மற்றும் பிரதீக் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 3 துப்பாக்கிகள் மற்றும் 2 வெடிக்க தயாரான நிலையில் உள்ள உறைகளுடன் கூடிய தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர்.இவர்களில் விஷால் மற்றும் பிரதீக் ஆகிய 2 பேரும் ஆயுதங்களை வாங்க வந்தவர்கள். இதுபோன்று பலரிடம் அவர்கள் ஆயுதங்களை விற்று வந்துள்ளனர். சமூக ஊடகம் வழியே ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்பின் வங்கி கணக்குகள் அல்லது நேரில் பணம் கொடுப்பது என பணபரிமாற்றமும் நடந்து உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என முசாபர்நகர் நகரத்தின் எஸ்.பி. சத்ய நாராயண் பிரஜாபதி கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
