எது இலவசம் : வரையறுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
எது இலவசம் : வரையறுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:'தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதி அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. 'இலவசம் என்றால் எது என்பதை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதி அளிப்பதை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.



அந்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள், தாங்கள் வெற்றி பெற்றால் இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளிக்கின்றன. இதுபோன்ற இலவசங்களால் நாட்டின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக்கோரி தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. இலவசங்களையும், மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நேர்மையான திட்டங்களையும் இணைத்துப் பார்த்து குழம்பக் கூடாது.வாக்காளர்கள் இலவசங்களை எதிர்பார்ப்பது இல்லை. மஹாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற வாய்ப்பு கிடைத்தால், அதன் வாயிலாக நேர்மையான ஒரு வருவாயைத் தான் அவர்கள் எதிர்
பார்க்கின்றனர். அதேநேரத்தில், அரசு நிதி சரியான வழியில் செலவிடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகைகள், 'டிவி' மற்றும் நுகர்வோர் மின்சாதன பொருட்களை இலவசமாக வழங்குவதற்கும், உண்மையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வேறுபாடு உள்ளது. இப்போது நம் கவலை என்னவென்றால், மக்களின் வரிப் பணம் சரியான முறையில் செலவிடப்பட வேண்டும். மக்களின் வரிப்பணம் இலவசம் என்ற பெயரில் வீணடிக்கப்படக் கூடாது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. எனவே, எது இலவசம் என்பதை வரையறை செய்ய வேண்டும்.

தேர்தல் நேர அறிவிப்புகளை ஒழுங்குபடுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். இது தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், இது குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை, வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்
படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதுடில்லி:'தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதி அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. 'இலவசம் என்றால் எது என்பதை வரையறுக்க

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை