துரந்தோ கோப்பை: பெங்களூர் வெற்றி
துரந்தோ கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தியில் நடக்கின்றன. கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஜாம்ஷெட்பூர் எப்சி-பெங்களூர் எப்சி அணிகள் மோதின. அதில் பெங்களூர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. பெங்களூர் தரப்பில் கேப்டன் சுனில் சேட்ரி, ராய் கிருஷ்ணா ஆகியோரும், ஜாம்ஷெட்பூர் தரப்பில் ரிஷியும் தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றிப் பெற்ற உற்சாகத்தில் சேத்ரியும், கிருஷ்ணாவும் களத்தில் கொண்டாடுகின்றனர்.