நாங்களும் யூஸ் பண்ணுவோம்ல... குரங்குகளும் விதி விலக்கல்ல

தினகரன்  தினகரன்
நாங்களும் யூஸ் பண்ணுவோம்ல... குரங்குகளும் விதி விலக்கல்ல

பாலி: மனிதர்கள் சுய பாலியல் இன்பத்துக்காக ‘செக்ஸ் டாய்ஸ்’ எனப்படும் பாலியல் பொம்மைகளை பயன்படுத்துகின்றனர். உலகளவில் இது மிகப்பெரிய வர்த்தகமாக பரந்து விரிந்து, பல லட்சம் கோடி முதலீடும், விற்பனையும் நடக்கிறது. இந்நிலையில், மனிதர்கள் ஒருபுறம் இருக்க, குரங்குகளும் பாலியல் கருவிகளை பயன்படுத்தி சுய இன்பம் செய்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேஷியாவில் அமைந்துள்ள பாலி தீவில் குரங்குகள் வன சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள நீண்ட வால் கொண்ட குரங்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. இந்நிலையில், இந்த குரங்குகள் சுய இன்பத்துக்காக செக்ஸ் கருவிகளை பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். லெத்பிரிட்ஜ் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இங்குள்ள ஆண், பெண் குரங்குகள் அடிக்கடி கற்களின் மூலம் உணர்ச்சியை தூண்டி, சுய இன்பம் செய்வதை உறுதி செய்துள்ளனர்.கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான சரணலாயத்தின் வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து, அது சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான காட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளனர். இந்த வீடியோக்களில் குரங்குகள் கற்களை பிறப்புறுப்புகளில் தேய்ப்பது, தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு இன்பம் காண்பது பதிவாகி உள்ளன. குறிப்பாக, ஆண் குரங்குகள் கற்களுடன் அதிக உற்சாகத்துடன் இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளன. அது தொடர்பான ஆய்வை ஆய்வாளர்கள் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.2016ம் ஆண்டில் தான்சானியாவில் ஆண் மனித குரங்கு பழத்தை பயன்படுத்தியும், மற்றொரு ஆண் மனித குரங்கு பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி சுய இன்பம் செய்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

மூலக்கதை