அரசு மானியங்களை பெற ஆதார் எண் இனி கட்டாயம்!: மாநில அரசுகளுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ., சுற்றறிக்கை

தினமலர்  தினமலர்
அரசு மானியங்களை பெற ஆதார் எண் இனி கட்டாயம்!: மாநில அரசுகளுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ., சுற்றறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற, இனி ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுகட்டாயம்' என, அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டைகளை வினியோகித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், வங்கி சேவைகள் உட்பட பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


அடையாள அட்டை


யு.ஐ.டி.ஏ.ஐ., அளித்த புள்ளி விபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி, ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், யு.ஐ.டி.ஏ.ஐ., சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.இது தொடர்பாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., கடந்த 11ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. அதன் விபரம்:மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், அட்டை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அட்டை கிடைக்கும் வரை, விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன், அரசு அளித்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் சேர்த்து சமர்ப்பித்து உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.



தனிப்பட்ட தகவல்கள்


அதேபோல, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகின்றன. இந்த உதவிகளை பெற தகுதியுடையவர்கள், சில குறிப்பிட்ட சான்றிதழ்களை அரசிடம் இருந்து பெற வேண்டும். அந்த சான்றிதழ்களை பெறுவதற்கும் ஆதார் எண் அல்லது விண்ணப்ப ஒப்புகை சீட்டு இனி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆதார் எண்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் வாயிலாக தங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிவதை சிலர் விரும்பவில்லை.இதை எதிர்கொள்ள, வி.ஐ.டி., எனப்படும், 'விர்ச்சுவல் ஐடென்டிபையர்' என்ற சேவையை சமீபத்தில் யு.ஐ.டி.ஏ.ஐ., அறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆதார் எண் உள்ளவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக தங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்தால், அவர்களுக்கு 16 இலக்க தற்காலிக எண் வழங்கப்படும். அந்த எண்ணை தெரிவித்து, பயனாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டது. ஆனால், சில சமூக நலத்திட்ட உதவிகள் சிக்கலின்றி செயல்பட முழுமையான ஆதார் எண் அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் பயனாளர்களிடம் முழுமையான ஆதார் எண்ணை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதுடில்லி: 'மத்திய - மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற, இனி ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுகட்டாயம்' என, அனைத்து மத்திய

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை