தொழுநோய் கண்டறியும் பணிகள் இன்று முதல்...துவக்கம்

தினமலர்  தினமலர்
தொழுநோய் கண்டறியும் பணிகள் இன்று முதல்...துவக்கம்


தேனி -'மாவட்டத்தில் தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்ட களப்பணி ஆக., 16ல் துவங்கி செப்., 3 வரை நடக்க உள்ளது. இதற்காக மாவட்ட தொலுநோய் கண்டுபிடிப்பு இயக்க களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று, பரிசோதனை செய்ய உள்ளனர்.

இவர்களின் பரிசோதனை பணிக்கு, தயக்கம் இன்றி பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நம் உடலின் தோல் பகுதியில் நிறமாற்றம், தேமல், மினுமினுப்பு, சிறு கட்டி, மணிகட்டு துவண்ட நிலை, உள்ளங்கையில் உணர்ச்சி இன்றி மரத்துப் போதல், தொடுதல், சுடுதல் உள்ளிட்டவற்றை உணர முடியாமல் போகுதல், பொருட்களை இறுக பிடிக்க முடியாத நிலை, சோறு பிசைதல், பணம் எண்ணுதல், புத்தக பக்கத்தை புரட்டுதல் என, கைகளால் தினசரி மேற்கொள்ளும் பணிகளில் தடுமாற்றம். காலில் இருந்து காலணி நழுவுதல், காலை உயர துாக்கி நடக்கு நடை, குதிகாலில் நீண்ட பெரிய வெடிப்பு, உள்ளங்கால்களில் நாள்பட்ட குழிப்புண் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால் தங்களை தேடி வரும் மருத்துவ குழுவினரிடம் தெரிவித்து பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம். இப்பணிகளை மாவட்ட தொலு நோய் ஒழிப்பு திட்ட களப்பணியாளர்கள் இன்று முதல் துவக்க உள்ளனர்.

மாவட்ட தொழுநோய் மருத்துவத்துறை துணை இயக்கனர் டாக்டர் ரூபன்ராஜ் கூறுகையில், 'இன்று (ஆக.,16) முதல் செப்., 3 வரை இப்பரிசோதனைகளை மருத்துவத்துறை களப்பணியாளர்கள் மூலம் கண்டறிய உள்ளோம். பாக்டீரியா இனத்தை சேர்ந்த ஒரு வகை கிருமியால் ஏற்படும் இந்நோய் காற்றின் மூலம் பரவுகிறது. இது கிருமிகளை எதிர்க்கும் திறன் இல்லாதவர்களை மட்டுமே தாக்கும் என்பதால் அச்சம் அடைய தேவை இல்லை.

சமூகத்திற்கு, உறவினர்களுக்கு அச்சப்பட்டு, தயக்கப்பட்டு பரிசோதனை செய்யாமல் இருந்தால் நோய் முத்திய பின் குணப்படுத்த இயலாது. ஆனால், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தி விடலாம். அதனால் முக்கியமாக பொதுமக்கள் மருத்துவ களப்பணியாளர்களிடம் தயக்கம் இன்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.' என்றார்.


தேனி -'மாவட்டத்தில் தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்ட களப்பணி ஆக., 16ல் துவங்கி செப்., 3 வரை நடக்க உள்ளது. இதற்காக மாவட்ட தொலுநோய் கண்டுபிடிப்பு இயக்க களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை