ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்: ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர்

தினமலர்  தினமலர்
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்: ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : ''மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்தார்.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், தேசியக் கொடி ஏற்றி வைத்து, அவர் பேசியதாவது:கடந்த 15 நாட்களாக, நாட்டில் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக, அனைத்து வீடுகளிலும், தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சமூக வலைதளங்களில், தேச பக்தி, தேசிய உணர்வுகள் குறித்த கருத்துகள் சிறப்பாக இடம் பெற்றன. அன்னியரை எதிர்த்து சுதந்திரம் பெற, பாரத நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து போராடி உள்ளனர். அவர்களை நினைவுகூர்வது மிகுந்த மகிழ்ச்சி.

விடுதலைப் போரில், தமிழகத்தை சேர்ந்தவர்களின் பங்கு பெரிது. பாரதியார், சத்தியமூர்த்தி, நம் வீரத்தாய் குயிலி, வீரமங்கை வேலு நாச்சியார், முத்துராமலிங்க தேவர் என ஏராளமானோரின் பங்கு மிகப் பெரியது. பாலகங்காதர திலகர், காந்தி, வீரசாவர்கர், அரவிந்தர் போன்றவர்களின் உத்வேகத்தால், தமிழகத்தில் இருந்து பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.


நம் நாடு உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. நம் முன்னோரின் தியாகம், போராட்டங்கள் குறித்து, அடுத்து வரும் இளைய சமுதாயத்திற்கு, அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும். நம் நாடு, உலகத்துக்கு கொடுக்கக் கூடிய கொடைகள் அதிகம். யோகா வழியே உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. தொழில் நுட்பம், ஆயுர்வேதம், சமஸ்கிருதம், நம் குடும்ப அமைப்பு முறை, கலை, கலாசாரங்கள் ஆகியவற்றையும், உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கின்றனர். வேற்றுமையில் பிரிவு என்பது கிடையாது. நம் நாட்டில், ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது. மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாசாரம் எனும் உறுதியுடன் இந்த நாளைக் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை : ''மொழி, ஜாதி, சமயம் மற்றும் இனங்களைக் கடந்து, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, நம் பாரதம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று, உலகத்தில் தலைசிறந்த நாடாக திகழும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை