நீதி வழங்குவதில் சமபங்கு : தலைமை நீதிபதி பெருமிதம்

தினமலர்  தினமலர்
நீதி வழங்குவதில் சமபங்கு : தலைமை நீதிபதி பெருமிதம்

புதுடில்லி :''அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில் நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகிய மூன்றும் சமபங்கு வகிக்கின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மூவர்ண கொடியை ஏற்றி நேற்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:




நீதித்துறையின் வாயிலாக தங்களுக்கான நீதியும், நிவாரணமும் கிடைக்கும் என மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். பிரச்னையை மக்கள் எதிர்கொள்ளும் மன வலிமையை நீதித்துறை
அளிக்கிறது. எந்த நிலையிலும் நீதித்துறை அவர்களுக்காக துணை நிற்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவின் அரசியலமைப்பை உச்ச நீதிமன்றம்பாதுகாக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு நீதித்துறை வலு சேர்த்துள்ளது.
நம் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில், நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகியவற்றுக்கு சமபங்கு உள்ளது. ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட கடமையை நம் அரசியலமைப்பு வழங்கி உள்ளது. அதில், நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது என்ற கருத்தை அரசியலமைப்பின் சட்டவிதி 38 நிராகரிக்கிறது.
சமூக, பொருளாதார, அரசியல் நீதி வழங்கும் கடமை பார்லிமென்டுக்கு உள்ளது என அதில் குறிப்பிடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

புதுடில்லி :''அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதில் நிர்வாகம், பார்லிமென்ட், நீதித்துறை ஆகிய மூன்றும் சமபங்கு வகிக்கின்றன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை