விருது பணம் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கு தந்தார் நல்லக்கண்ணு

தினமலர்  தினமலர்
விருது பணம் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கு தந்தார் நல்லக்கண்ணு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : சுதந்திர தின விழாவில், 'தகைசால் தமிழர் விருது' பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயுடன், தன் பணம் 5,000 ரூபாயை சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு, அதே மேடையில் வழங்கி, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு டிச., 25ல் பிறந்தவர் நல்லக்கண்ணு. தன் பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கடந்த 1943ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்டபோது தலைமறைவானார். ஜாதீய அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலராகவும் பணியாற்றி உள்ளார். இவரது 80வது பிறந்த நாளை ஒட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்கொடை வசூலிக்கப்பட்டு, 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அந்த தொகையை, அந்த மேடையிலேயே கட்சிக்கு திருப்பிக் கொடுத்தார்.


கடந்த 2008ல், தமிழக அரசு, அம்பேத்கர் விருதுடன் 1 லட்சம் ரூபாய் வழங்கியது. இதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார்.தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும், பெரும் பங்களிப்பை வழங்கிய நல்லக்கண்ணுவுக்கு, 2022ம் ஆண்டுக்கான, தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டது. நேற்று கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், நல்லக்கண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

விருதுத் தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட நல்லக்கண்ணு, அத்துடன் தன் பணம் 5,000 ரூபாய் சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்காக, முதல்வரிடம் வழங்கினார்.தனக்கு வழங்கப்பட்ட விருது தொகையை, அதே மேடையில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியதாக அறிவிக்கப்பட்டதும், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை : சுதந்திர தின விழாவில், 'தகைசால் தமிழர் விருது' பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட, 10 லட்சம் ரூபாயுடன், தன் பணம் 5,000 ரூபாயை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை