சிறுவாணியில் தண்ணீர் வெளியேற்றம்: முதல்வர் வேண்டுகோளுக்கு 'பெப்பே'

தினமலர்  தினமலர்
சிறுவாணியில் தண்ணீர் வெளியேற்றம்: முதல்வர் வேண்டுகோளுக்கு பெப்பே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை-முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கண்டுகொள்ளாமல், மூன்றாம் நாளாக நேற்றும், சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியுள்ளது.

கேரள வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் தேக்கப்படும் தண்ணீரே, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரம்.அதனால், முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.




இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை கூறி, சிறுவாணியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை அம்மாநில நீர்ப்பாசனத் துறையினர் தொடர்கின்றனர்.கடந்த மாதம், 8 அடி தண்ணீரை வெளியேற்றினர். இது குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அணை நீர் மட்டம் உயர்ந்தது.மீண்டும் தண்ணீரை வெளியேற்றி விடக்கூடாது என்பதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழுவினர், கேரளா சென்று நீர்ப்பாசனத் துறையினரை நேரில் சந்தித்து, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வலியுறுத்தினர். இதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.



சனிக்கிழமை, நீர் மட்டம், 43 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சனிக்கிழமை, 8.6; ஞாயிறு, 4; நேற்று, 9 செ.மீ., மழை பதிவானது. சிற்றருவிகளில் இருந்தும் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயர்ந்திருக்க வேண்டும்.நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மதகுகளை, 50 செ.மீ., திறந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். அதனால், நீர் மட்டம், 43 அடியாகவே இருக்கிறது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இரு மாநில செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.


கோவை-முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கண்டுகொள்ளாமல், மூன்றாம் நாளாக நேற்றும், சிறுவாணி அணையில் மதகுகளை திறந்து கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியுள்ளது.கேரள வனப்பகுதியில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை