வங்கதேசத்தில் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுதும் வெடித்தது போராட்டம்

தினமலர்  தினமலர்
வங்கதேசத்தில் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுதும் வெடித்தது போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டாக்கா-வங்கதேசத்தில், இதுவரை இல்லாத வகையில், பெட்ரோல் - டீசல் விலை, 52 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.




நம் அண்டை நாடான வங்கதேசம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 28 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.'வங்கதேசம் தனி நாடாக உருவாகி இத்தனை ஆண்டுகளில், எரிபொருள் விலை 52 சதவீதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை' என, பொருளாதார நிபுணர் கள் தெரிவித்தனர்.

இந்த விலை உயர்வு, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. விலை உயர்வு அறிவிக்கப்பட்ட 5ம் தேதியன்று, நுாற்றுக்கணக்கான மக்கள் பெட்ரோல் 'பங்க்'குகளில் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் நிலவியது.பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் இந்த முடிவுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினரும் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், கண்டன பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விலை ஏற்றம் குறித்து, வங்கதேசத்தின் மின்சாரம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீத் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில், 'பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனத்துக்கு, 800 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கடுமையான விலை ஏற்றத்தை மக்களால் தாங்க முடியாது என்பது தெரியும். ஆனால், இதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. மக்கள் சற்று அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளானதை அடுத்து, அவர்களில் ஏழு லட்சம் பேர், 2017ல் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். சீனாவின் வேண்டுகோளை ஏற்று, வங்கதேசம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தஞ்சம் அளித்தது. இவர்களை மியான்மர் திரும்புமாறு, வங்கதேச அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அச்சம் காரணமாக, அகதிகள் திரும்ப மறுக்கின்றனர். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, சமீபத்தில் வங்கதேசம் வந்தார். அவரிடம் அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப உதவிடுமாறு, வங்கதேசம் கோரிக்கை வைத்துஉள்ளது.



டாக்கா-வங்கதேசத்தில், இதுவரை இல்லாத வகையில், பெட்ரோல் - டீசல் விலை, 52 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.nsimg3095489nsimg நம் அண்டை நாடான வங்கதேசம், கடும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை