'நிடி ஆயோக்' நிர்வாக கவுன்சில் கூட்டம்பிரதமர் தலைமையில் நாளை நடக்கிறது

தினமலர்  தினமலர்
நிடி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம்பிரதமர் தலைமையில் நாளை நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-'நிடி ஆயோக்' நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நாளை நடக்கிறது.

'



வீடியோ கான்பரன்ஸ்'

நாடு முழுதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. இதற்கு பதிலாக நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. நிடி ஆயோக்கின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் அந்தக்குழு இயங்கி வருகிறது. அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் முதல் கூட்டம் 2015ல் நடந்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2020ல் கூட்டம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.இந்நிலையில், நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நாளை நடக்கிறது.

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் கூட்டம் நடக்க உள்ளது.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை கொண்டாடவுள்ள நேரத்தில், அனைத்து மாநிலங்களும் சுறுசுறுப்புடனும், மீள் தன்மையுடனும், தன்னம்பிக்கையுடனும், கூட்டாட்சி உணர்வுடனும் சுயசார்பு இந்தியாவை நோக்கி நடை போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.




முக்கிய அம்சங்கள்

பயிர் பல்வகைப்படுத்துதல், எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைதல், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல், நகர்ப்புற நிர்வாகம் ஆகியவை நாளைய கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதுடில்லி-'நிடி ஆயோக்' நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நாளை நடக்கிறது.'nsimg3093351nsimg வீடியோ கான்பரன்ஸ்' நாடு முழுதும் மாநிலங்களுக்கு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை