நாடு முழுதும்... காங்., ஆர்ப்பாட்டம்!

தினமலர்  தினமலர்
நாடு முழுதும்... காங்., ஆர்ப்பாட்டம்!

விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும், கறுப்பு உடை அணிந்துகாங்., - எம்.பி.,க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயற்சித்த காங்., - எம்.பி., ராகுல் கைது செய்யப்பட்டார். கட்சி தலைமையகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்காவையும் போலீசார் கைது செய்தனர்.மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் இறுதி நாளான நேற்றும், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியும், கூச்சல் குழப்பமும் நிலவின.

வெளிநடப்பு



கேள்வி நேரம் துவங்கிய சில நிமிடங்களுக்குள் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு லோக்சபா கூடியதும், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளின் எம்.பி.,க்கள் பேசுவதற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்.இதை ஏற்க, சபாநாயகராக இருந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்த கீர்த்தி பிரேம்ஜி பாய், மறுப்பு தெரிவிக்கவே, வேறு வழியின்றி தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபாவும் கூடிய சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக காலையில் காங்., தலைவர் சோனியா, ராகுல், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட லோக்சபா காங்., - எம்.பி.,க்களும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ராஜ்யசபா காங்., - எம்.பி.,க்களும் பார்லி.,க்கு கறுப்பு உடையில் வந்திருந்தனர்.விலைவாசி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரி உயர்வு குறித்து, பார்லி.,யின் பிரதான வாயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், 64 எம்.பி.,க்களும் கோஷம் போட்டபடி ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது, டில்லி போலீசார் வழி மறித்ததை அடுத்து பிரச்னை உருவானது.பல எம்.பி.,க்கள் தடையை மீற முயலவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல், வேணுகோபால் உள்ளிட்ட சிலர் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தவே நிலைமை பரபரப்பானது. பின், அனைவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதே போல ராஜஸ்தான், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி., வரி உயர்வு ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, நாடு முழுக்க ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள் கைதாகினர்.

போலீசார் குவிப்பு



புதுடில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அக்பர் சாலையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.காங்., அலுவலக வாசலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, தடுப்புகளை தாண்டிக் குதித்து, விலைவாசி உயர்வை எதிர்த்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அவருடன் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், பிரியங்கா உள்ளிட்டோர் செல்லவில்லை.
இதையடுத்து, பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

*என் குடும்பம் பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. எனவே, கொள்கைரீதியாக எதிர்ப்பது எங்கள் கடமை. இந்த சண்டை சிந்தாந்த ரீதியிலானது.ராகுல், காங்., - எம்.பி.,

* ராகுல் ஒன்றும் காந்தியின் வாரிசு அல்ல. இவர் ஒரு போலி காந்தி. அவர் மட்டுமல்ல, அவரது சிந்தாந்தமும் போலியானது.பிரஹலாத் ஜோஷிபார்லி., விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,

வெங்கையா நாயுடு கறார்ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும்போதே, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியதை கண்டித்து கோஷமிட்டனர். இதற்கு பதில் அளித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:அரசியலமைப்பு சட்ட விதி எண் 105ன் படி, பார்லிமென்ட் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையை எந்தவித இடையூறும் இன்றி நிறைவேற்றுவதற்காக சில சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்னதாகவோ, பின்பாகவோ, எந்த ஒரு சிவில் வழக்குகளிலும் எம்.பி.,க்களை கைது செய்ய முடியாது. அதே நேரத்தில் கிரிமினல் வழக்குகளுக்கு இந்த சலுகை பொருந்தாது. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும்போது எம்.பி.,க்களை கைது செய்யவோ, அவர்களுக்கு சம்மன் அளிக்கவோ கூடாது என கூற முடியாது. இது தொடர்பான எந்த சலுகையும் எம்.பி.,க்களுக்கு இல்லை. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடப்பதை காரணமாக கூறி, விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக முடியாது என, எம்.பி.,க்கள் கூற முடியாது; இதை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



புதுடில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அக்பர் சாலையில் நேற்று போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.காங்., அலுவலக வாசலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, தடுப்புகளை தாண்டிக் குதித்து, விலைவாசி உயர்வை எதிர்த்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், பிரியங்கா உள்ளிட்டோர் செல்லவில்லை.இதையடுத்து, பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.


. - நமது டில்லி நிருபர் -

விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை