1.4 லட்சம் பேருக்கு வேலை ரயில்வே அமைச்சர் தகவல்

தினமலர்  தினமலர்
1.4 லட்சம் பேருக்கு வேலை ரயில்வே அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :“ரயில்வே துறையில் 2014ல் இருந்து 3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.4 லட்சம் பேரை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,”
என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.




ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்யசபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். இதில், ரயில்வே துறை முக்கிய இடம் வகிக்கிறது.


இந்த ஆண்டு இதுவரை 18 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ல் இருந்து இதுவரை 3.5 லட்சம் பேர் நாடு முழுதும் ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், 1.40 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் அவர்கள் பணிஅமர்த்தப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுடில்லி :“ரயில்வே துறையில் 2014ல் இருந்து 3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.4 லட்சம் பேரை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன,” என, ரயில்வே அமைச்சர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை