அமெரிக்காவில் வேகமெடுக்கும் குரங்கு அம்மை பரவல்!: 6,000 பேர் பாதிப்பு..பொது சுகாதார அவரச நிலை பிரகடனம்..!!

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் வேகமெடுக்கும் குரங்கு அம்மை பரவல்!: 6,000 பேர் பாதிப்பு..பொது சுகாதார அவரச நிலை பிரகடனம்..!!

குரங்கு அம்மை தொற்று நோயை பொது சுகாதார அவரச நிலையாக அமெரிக்கா பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் தீவிரமடைந்து வருவதால் மாகாண அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து வந்தன. நியூயார்க், இலினாய்ஸ், கலிபோர்னியாவில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில் குரங்கு அம்மை நோயை அமெரிக்கா பொது சுகாதார அவரச நிலையாக நேற்று அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்று அமெரிக்க அதிபருக்கான மருத்துவ துறை ஆலோசகர் அந்தோணி பவுசி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், குரங்கு அம்மை நோயை எதிர்கொள்வதற்கு அனைவரது கரங்களும் தயாராகிவிட்டன என்பதே சமூகத்திற்கு ஒரு மிக முக்கியமான சமிக்ஞை. குரங்கம்மை தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள். மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டதால் நோய் பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும். மருத்துவ நடவடிக்கைகளை நாடு முழுவதும் விரைவு படுத்தலாம். அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவைப்படும் நிதியையும் சுலபமாக ஏற்படுத்த முடியும் என்றார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. இதுவரை 75 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள குரங்கம்மை, பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருவதால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை WHO சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை