ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்

தினகரன்  தினகரன்
ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்

லண்டன்:இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இந்திய அணியினர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் விளையாடி வருகிறார்கள். இந்த 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி டெஸ்ட் 3 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. பயிற்சி டெஸ்டிற்கு முன்பு விராட் கோஹ்லிக்கு கொரோனா உறுதியானது. இருப்பினும் அடுத்த நாளே நெகடிவ் என வந்ததால், வீரர்களுடன் இணைந்துகொண்டார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தியாவில் விமான நிலைத்தில் கொரோனா உறுதியானதால், இங்கிலாந்து புறப்படவில்லை. இன்று (ஜூன் 26) கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும். இதில் நெகடிவ் என வந்தால் மட்டுமே, அவரால் இங்கிலாந்து புறப்பட்டு டெஸ்டில் பங்கேற்க முடியும். இந்நிலையில் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் பங்கேற்ற கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா  பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின்  கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

மூலக்கதை