பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
பஞ்சு விலை சரிவு: ஜவுளி துறையினர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பூர்,--பஞ்சு விலை, தற்போது படிப்படியாக இறங்க துவங்கி இருப்பது, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி உற்பத்தி துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.




பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்து, 2021 அக்டோபரில் துவங்கியது. முன் எப்போதும் இல்லாத வகையில், சீசன் துவக்கம் முதலே, பஞ்சு விலை கேண்டி எனப்படும், 356 கிலோ, 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த ஜனவரியில், 80 ஆயிரம் ரூபாயை தொட்டது. ஏப்ரல் மாத துவக்கத்தில், 1 லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்தது. மேலும் உயர்ந்து, ஒரு கேண்டி பஞ்சு அதிகபட்சமாக, 1.15 லட்சம் ரூபாய் வரை உச்சத்தை தொட்டது;

இரு மாதங்களாக, 1.08 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலை கொண்டது.வரலாறு காணாத பஞ்சு விலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி உற்பத்தி துறையையும் ஆட்டம் காணச் செய்தது. தமிழக நுாற்பாலைகள், அனைத்து ரக நுால் விலைகளையும் தொடர்ந்து உயர்த்தின.பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி நகரங்களுக்கு, வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கு 'ஆர்டர்' வருகை வெகுவாக குறைந்தது.ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பருத்தி நுால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளது. இது, நுாற்பாலைகளுக்கு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இழப்பை சமாளிக்க, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழக நுாற்பாலைகள், நுால் உற்பத்தியை குறைத்துள்ளன. இதையடுத்து, உள்நாட்டில் பருத்தி பஞ்சு தேவை குறைந்துவிட்டது.வரும் செப்டம்பரில், பருத்தி சீசன் துவங்க உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது விலை குறையும். இக்காரணங்களால், தற்போது பஞ்சு விலை படிப்படியாக இறங்க துவங்கியுள்ளது.



ஒரு கேண்டி பஞ்சு விலை, 96 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது; இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. பஞ்சு விலையின் இறங்கு முகம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உட்பட தமிழக ஜவுளி துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.புதிய சீசன் துவங்கும் போது, பஞ்சு விலை சரிந்து, நுால் விலையும் சீராகும்; ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்களை பெறுவது எளிதாகும் என்ற நம்பிக்கையுடன் ஜவுளித்துறையினர் காத்திருக்கின்றனர்.

திருப்பூர்,--பஞ்சு விலை, தற்போது படிப்படியாக இறங்க துவங்கி இருப்பது, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி உற்பத்தி துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.nsimg3062220nsimg பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்து,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை