லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசின் திட்டத்தில் வீடு ஒதுக்கவில்லை என கூறி விஷம் குடித்தவர் உயிரிழப்பு
திருவாரூர்: லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசின் திட்டத்தில் வீடு ஒதுக்கவில்லை என கூறி விஷம் குடித்தவர் உயிரிழந்துள்ளார். கோட்டூர் பெரிய குருவாடியை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்துள்ளார். ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஊராட்சி தலைவரின் கணவர் வீடு ஒதுக்கவில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.