இது உங்கள் இடம்: 'தமிழ் வாழ்க' போர்டை குப்பையில் வீசுங்க!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: தமிழ் வாழ்க போர்டை குப்பையில் வீசுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

எஸ்.மன்னர்மலைமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை, 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில், 5.16 சதவீத மாணவர்கள், அதாவது, 47 ஆயிரம் பேர் தமிழில் தோல்வி அடைந்து உள்ளனர் என்ற செய்தியை படிக்கும் போது, தாய் மொழி மீது பற்றுக் கொண்ட அனைவரின் நெஞ்சமும் குமுறுகிறது.

'தமிழ் செம்மொழி... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்...' என்று முழங்கும் திராவிட மாடல் அரசு, ஓராண்டில் 100 சாதனையை நிகழ்த்தி விட்டதாக பெருமை அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், 47 ஆயிரம் மாணவர்கள் தாய்மொழியான தமிழில் தோல்வி அடைந்திருப்பது, பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் மாற்றமில்லை. 'தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

'மருத்துவ கல்வியை தாய்மொழியிலேயே படிக்கலாம்' என, பிரதமர் மோடியும் கூறியுள்ளார். ஆனால், அந்தக் கல்விக் கொள்கையை ஏற்காமலும், பிரதமர் மோடியின் யோசனையை புறக்கணித்தும், தமிழகத்திற்கு என, புதிய கொள்கையை உருவாக்க குழுவை நியமித்துள்ளது ஸ்டாலின் அரசு. இதிலிருந்தே, எந்த மொழியையும், தமிழக மாணவர்கள் உருப்படியாக கற்றுக் கொள்ள, தி.மு.க., அரசு அனுமதிக்காது என்றே தெரிகிறது.


'தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர், தமிழ் மொழி தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால் தான், மற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி, பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாட்டையும், அதிலும், தொடக்கக்கல்வி துறையின் செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கையே நீடிக்கும்; மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்று கூறி வரும் திராவிட செம்மல்கள், தாய் மொழியையே மாணவர்கள் மோசமாக கற்கும் பரிதாப நிலைமை நீடிக்க அனுமதித்தால், மாநிலத்தின் கல்வித்தரம் மிக மோசமாகும். ஆங்கிலத்தை கண்டு, அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுவது போல, இனி தமிழை கண்டும் அஞ்சும் சூழ்நிலை உருவாகும்.

தமிழக மாணவர்கள் அனைவரும், தமிழில் தோல்வி அடையவே மாட்டார்கள்; அந்த அளவுக்கு அவர்களுக்கு தமிழ் முறையாக போதிக்கப்படும்; தமிழாசிரியர்கள் பற்றாக்குறையே பள்ளிகளில் இருக்காது என்ற நிலையை, தி.மு.க., அரசு உருவாக்க வேண்டும். இல்லையெனில், அரசு அலுவலகங்களில் தொங்கும், 'தமிழ் வாழ்க' என்ற போர்டை குப்பைத் தொட்டியில் வீசுங்க!

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:எஸ்.மன்னர்மலைமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை