மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி உடைகிறது: சிவசேனா அறிவிப்பால் கட்சிகள் அதிருப்தி

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி உடைகிறது: சிவசேனா அறிவிப்பால் கட்சிகள் அதிருப்தி

மும்பை-அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், ''மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகத் தயார்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அறிவித்தார். இது, கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் கட்சியிலும், ஆட்சியிலும் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து, எங்களுடைய வலியுறுத்தலால், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் துரதிருஷ்டவசமான முடிவை ஏக்னாத் ஷிண்டே எடுக்க நேர்ந்தது.சொந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வரை நாங்கள் சந்திக்க முடியவில்லை. அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள கட்சியினர் சாதாரணமாக சந்திக்க முடிந்தது. இந்த நேரத்தில் ஷிண்டே எங்களுடைய குறைகளை, பிரச்னைகளை காது கொடுத்து கேட்டார்; தீர்வு காண்பதற்கும் உதவினார். ராஜ்யசபா தேர்தலின்போது, ஒரு இடத்தை இழப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை. உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு உங்கள் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே சென்றபோது, எங்களை ஏன் உடன் அழைத்து செல்லவில்லை? ஹிந்துத்துவா, ராமர் கோவில், அயோத்தி ஆகியவை நம்முடைய பிரச்னை இல்லையா?இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.




குஜராத்தின் சூரத்துக்கு, அதிருப்தியாளர்களுடன் சென்ற சிவசேனா எம்.எல்.ஏ., கைலாஷ் படேல், அங்கிருந்து தப்பி மும்பை வந்துள்ளார். அவர் கூறியதாவது:எங்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். என்னைப் போலவே பலரும் திரும்பி வர தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதற்காக திரும்பி வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.




அசாம் மாநிலம் கவுஹாத்தியில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சியை உடைப்பதற்கு தேவையான 37 எம்.எல்.ஏ.,க்களை விட அதிகமானோர் தன்னிடம் உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, கவுஹாத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிரா சட்டசபையில், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கட்சிக்கு, லோக்சபாவில் 19 பேரும், ராஜ்யசபாவில் மூன்று பேரும் எம்.பி.,க்களாக உள்ளனர்.






அசாம் மாநிலம் கவுஹாத்தியில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சியை உடைப்பதற்கு தேவையான 37 எம்.எல்.ஏ.,க்களை விட அதிகமானோர் தன்னிடம் உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, கவுஹாத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மஹாராஷ்டிரா சட்டசபையில், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கட்சிக்கு, லோக்சபாவில் 19 பேரும், ராஜ்யசபாவில் மூன்று பேரும் எம்.பி.,க்களாக உள்ளனர்.


மும்பை-அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், ''மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகத் தயார்,'' என, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அறிவித்தார். இது,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை