இன்று அ.தி.மு.க., பொதுக் குழு

தினமலர்  தினமலர்
இன்று அ.தி.மு.க., பொதுக் குழு

சென்னை : 'அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் அனைத்து தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்ட துவங்கினர். மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலர்களில், 69 பேர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என, அனைவரும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைக் கண்ட பன்னீர்செல்வம், இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்தி வைக்கும்படி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்காத பழனிசாமி, 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்' என பதில் அனுப்பினார்.அதைத் தொடர்ந்து, 'பொதுக்குழு நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, பொதுக்குழு நடத்த அனுமதிக்க வேண்டாம்' என, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், போலீசில் மனு கொடுத்தனர். அந்த மனுவை நிராகரித்த போலீசார், 'பொதுக்குழுவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்' என அறிவித்தனர்.

நீதிமன்றம் அனுமதி


இதையடுத்து, பன்னீர் செல்வம் தரப்பினர் நீதிமன்றம் சென்றனர்; பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரினர். இதனால் பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற நிலை ஏற்பட்டது. நேற்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. முடிவில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து,நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். முன்னதாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள, 23 வரைவு தீர்மானங்களை, பழனிசாமி தரப்பினர் பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதற்கு பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கினார். அதேபோல, கட்சியின் வரவு செலவு கணக்கும், அவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தீர்மானக் குழு வடிவமைத்து கொடுத்த, 23 தீர்மானங்கள் தவிர, வேறு தீர்மானங்களை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என, நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பில் கோரப்பட்டது. 'பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படலாம். பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது' என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்கவில்லை. இது பழனிசாமி தரப்பினரிடம் மகிழ்ச்சியையும், பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி பொதுக்குழுவை இன்று நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இன்று பொதுக்குழு



சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்க உள்ளது.பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும், காலை 9:30 மணிக்கு முன்பாக, கூட்ட அரங்கிற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனிசாமிக்கு வெற்றி?



ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, பொதுச்செயலர் பதவியை மீண்டும் உருவாக்கி, அதில் பழனிசாமியை நியமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அதற்கேற்ப, 'கட்சியினர் பொதுச் செயலராக பொறுப்பேற்க, பொதுக்குழுவுக்கு வரும் பழனிசாமியே வருக' என, பேனர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். இந்த வகையில், பழனிசாமி தன் எண்ணப்படி வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

சென்னை : 'அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடந்தது. கூட்டம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை