பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குவிகிறது: எதிர்க்கட்சிகளும் வரவேற்பு

தினமலர்  தினமலர்
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குவிகிறது: எதிர்க்கட்சிகளும் வரவேற்பு

புதுடில்லி,-ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ள திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மிகப் பெரிய கவுரவம்!



திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் பேசினார். அவர் இந்த மாநிலத்தின் மகள். இது ஒடிசாவுக்கு கிடைத்துள்ள கவுரவம். நாட்டில் பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதை நான் பார்க்கிறேன். கட்சி வேறுபாடு இல்லாமல், ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் அவருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்.நவீன் பட்நாயக், ஒடிசா முதல்வர், பிஜு ஜனதா தளம்

எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தன் பிரசார யுக்திக்கான முதல் கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதன் பின், அவர் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் என்னை பொது வேட்பாளராக அறிவித்துள்ள கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது, இரண்டு நபர்களுக்கு இடையேயான போட்டி அல்ல; நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைக்கு எதிரான போட்டியாகும்.ஜனாதிபதி பதவி என்பது மிகவும் முக்கியமானதாகும். அரசின் எந்த நிர்ப்பந்தத்துக்கும் நான் அடிபணிய மாட்டேன்.நம் நாட்டுக்கு, 'ரப்பர் ஸ்டாம்ப்' ஜனாதிபதி தேவையில்லை. இதை, தேர்தலில் ஓட்டு போட உள்ள அனைத்து கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வரும் 27ல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள யஷ்வந்த் சின்ஹா, ஜார்க்கண்ட் மற்றும் பீஹாரில் இருந்து தன் பிரசாரத்தை துவக்க உள்ளதாக தெரிகிறது.



ஜனாதிபதி தேர்தல் குறித்து, எம்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:ஜனாதிபதி தேர்தலில், பார்லிமென்டில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில், எம்.பி.,க்கள் தங்களுடைய ஓட்டை பதிவு செய்யலாம். தேர்தல் நாளன்று புதுடில்லிக்கு வர முடியாதவர்கள், தங்கள் மாநில சட்டசபையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்கலாம்.இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு, 10 நாட்களுக்கு முன் வரை இந்த விண்ணப்பத்தை அளிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்து அதற்கு அனுமதி அளித்த பின், ஓட்டளிக்கும் இடத்தை மாற்ற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கமாக எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் மாநில சட்டசபையிலும் ஓட்டளிக்க வேண்டும். ஆனால், தற்போது சட்டசபையிலும் ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.அதேபோல் எம்.எல்.ஏ.,க்களும், பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டளிக்கலாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஒரு மாநில எம்.எல்.ஏ., மற்றொரு மாநில சட்டசபையில் ஓட்டளிக்கவும் வாய்ப்பு தரப்படும். ஆனால், இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.



ஜனாதிபதி தேர்தல் குறித்து, எம்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:ஜனாதிபதி தேர்தலில், பார்லிமென்டில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில், எம்.பி.,க்கள் தங்களுடைய ஓட்டை பதிவு செய்யலாம். தேர்தல் நாளன்று புதுடில்லிக்கு வர முடியாதவர்கள், தங்கள் மாநில சட்டசபையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளிக்கலாம்.இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு, 10 நாட்களுக்கு முன் வரை இந்த விண்ணப்பத்தை அளிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்து அதற்கு அனுமதி அளித்த பின், ஓட்டளிக்கும் இடத்தை மாற்ற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கமாக எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் மாநில சட்டசபையிலும் ஓட்டளிக்க வேண்டும். ஆனால், தற்போது சட்டசபையிலும் ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.அதேபோல் எம்.எல்.ஏ.,க்களும், பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டளிக்கலாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஒரு மாநில எம்.எல்.ஏ., மற்றொரு மாநில சட்டசபையில் ஓட்டளிக்கவும் வாய்ப்பு தரப்படும். ஆனால், இதற்காக முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.

புதுடில்லி,-ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ள திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. nsimg3059942nsimg பழங்குடியினத்தைச்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை