போராட்டகாரர்கள் வீடுகள் இடிப்பு ஏன்; உச்ச நீதிமன்றத்தில் உ.பி., அரசு விளக்கம்!

தினமலர்  தினமலர்
போராட்டகாரர்கள் வீடுகள் இடிப்பு ஏன்; உச்ச நீதிமன்றத்தில் உ.பி., அரசு விளக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-'போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வீடுகளை இடிக்கவில்லை. சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் கட்டியதாலேயே அவர்களுடைய வீடுகள் இடிக்கப்பட்டன' என, உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுவான வழக்கு



இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரின் வீடுகள், 'புல்டோசர்' மூலம் இடிக்கப்பட்டன. இதை எதிர்த்து, முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உத்தர பிரதேச அரசுகூறியுள்ளதாவது:சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளையே, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் நகராட்சி நிர்வாகம் இடித்து உள்ளது.

இதில் முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் எந்த வழக்கையும் தொடரவில்லை. ஆனால், முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒரு முஸ்லிம் அமைப்பு பொதுவான வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு அந்த அமைப்புக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை.

பொய்யான உருவகம்



வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்படியே, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படவில்லை.ஆனால், இரண்டு சம்பவத்தையும் இணைந்து, மதத்தின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொய்யான உருவகத்தை இந்த அமைப்பு ஏற்படுத்திஉள்ளது. அதற்காக இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி-'போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வீடுகளை இடிக்கவில்லை. சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் கட்டியதாலேயே அவர்களுடைய வீடுகள் இடிக்கப்பட்டன' என, உத்தர பிரதேச

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை