நாட்டின் பாதுகாப்புக்காகவே அக்னிபத் திட்டம்: கவர்னர்

தினமலர்  தினமலர்
நாட்டின் பாதுகாப்புக்காகவே அக்னிபத் திட்டம்: கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


புதுச்சேரி : மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை புதுச்சேரி அரசு, காவிரி வழிகாட்டு குழுவிடம் வலியுறுத்தி உள்ளதாக கவர்னர் தமிழிசை கூறினார்.இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 75 இடங்களில் சிறப்பு துாய்மைப் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நகராட்சி சார்பில் நேற்று பாரதி வீதி, நேரு வீதி, லாஸ்பேட்டை விமான நிலைய சாலைகளில் நடைபெற்ற துாய்மை பணிகளில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரியை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது அரசு மட்டுமே செய்யக்கூடிய பணி அல்ல. பொதுமக்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.




கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.காவிரி நதிநீர் பங்கீட்டில் புதுச்சேரிக்குரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. இதை வலியுறுத்தி காவிரி வழிகாட்டு குழுவிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை தெளிவாக அரசு வலியுறுத்தி உள்ளது.அக்னிபத் திட்டத்தை அரசியல் ஆக்குவதை விட, இந்த நாட்டின் பாதுகாப்பு கருதி அரசு ஒரு முடிவை எடுத்திருக்கிறது என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் உள்ளாட்சி, நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமை அலுவலகத்தில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, வில்லியனுார் புறவழிச் சாலை, சின்ன வீராம்பட்டினம் மற்றும் பாகூரில் நடந்த துாய்மை பணிகளில் கவர்னர் பங்கேற்றார்.

புதுச்சேரி : மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை புதுச்சேரி அரசு, காவிரி வழிகாட்டு குழுவிடம் வலியுறுத்தி உள்ளதாக கவர்னர் தமிழிசை கூறினார்.இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை