பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: நள்ளிரவில் விசாரணை

தினமலர்  தினமலர்
பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: நள்ளிரவில் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், நள்ளிரவில் விசாரணை நடத்தி வருகிறது


அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என, அனைவரும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைக் கண்ட பன்னீர்செல்வம், இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்தி வைக்கும்படி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்காத பழனிசாமி, 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்' என பதில் அனுப்பினார்.

மேல்முறையீடு



இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறயைீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.இ.பி.எஸ். தரப்பில், வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாரயணன், மற்றும் ஓ.பி.எஸ். தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.

நீதிபதி வீடு முன் போலீசார் குவிப்பு



மனுவை விசாரிப்பதற்காக சென்னை அண்ணா நகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்திற்கு நீதிபதி சுந்தர் மோகன் வந்தார். தகவலறிந்ததும், நீதிபதி துரைசாமி வீட்டிற்கு ஏராளமான போலீசார் நள்ளிரவில் குவிக்கப்பட்டனர்.

நள்ளிரவிலும் போஸ்டர் யுத்தம்


இன்று பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவிலும் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் அருகே , ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டினர்.

சென்னை: 'அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை