டெல்லி தீ விபத்து: நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
டெல்லி தீ விபத்து: நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் 27 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், தீ விபத்தில் தீக்காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.       

மூலக்கதை