" தகுதி நீக்கம் நினைத்து பார்க்கவில்லை " - ராகுல்

தினமலர்  தினமலர்
 தகுதி நீக்கம் நினைத்து பார்க்கவில்லை   ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சான் பிரான்சிஸ்கோ: அவதூறு வழக்கில், அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்ட முதல் நபர் நான் தான், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: 2004 ல் அரசியலில் சேர்ந்த போது, நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என நான் யூகிக்க முடியவில்லை.

அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் நபராக நானாக தான் இருப்பேன். பார்லிமென்டில் இருந்து தகுதி நீக்கம் என்ற அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான். இது போன்ற நடவடிக்கைகள் சாத்தியம் என நான் நினைத்தது இல்லை. ஆனால், இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். ஒரு வேலை பார்லிமென்டில் இருக்கக்கூடிய வாய்ப்பை விட மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சான் பிரான்சிஸ்கோ: அவதூறு வழக்கில், அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்ட முதல் நபர் நான் தான், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. என

மூலக்கதை